இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து வாசிக்க…
வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இலங்கையை 6 வருடகாலப் பகுதிக்குள் சிறந்த சுகாதாரத் துறையை கொண்ட நாடாக மாற்றியமைக்கப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரியில் தெரிவித்தார்.
டெங்கு நோயினால் களனி பிரதேசத்தில் மரணம் சம்பவிக்குமாயின் உரிய சுகாதார பொறுப்பதிகாரிகளை மரணம் சம்பவித்த வீட்டுவாசலில் உள்ள மரத்தில் கட்டி வைப்பேன் என நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா சூளுரைத்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி கடந்த 10 மாதங்களில் 21 மெட்ரிக் தொன் தங்கத்தை வாங்கியுள்ளதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் சேமிப்பு பெரிதும் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
வாகரைப்பரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அம்மன் சிலை வாகரை பொலிசார் திங்கட்கிழமை (26.7.2010) வாழைச்சேனை நீதிமன்றத்தில் நீதிபதியின் தீர்ப்புக்காக ஒப்படைத்துள்ளனர். வாகரைப்பிரதேசத்திலுள்ள கதிரவெளி எனுமிடத்திலிருந்து 4கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மலைபயடி வாரத்தில் அம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்ட நபரொருவர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
கொழும்பில் ஆடிவேல் விழாவை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையானது, இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் புத்திஜீவிகள்,கல்விமான்கள் மற்றும் மதப்பெரியார்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இருபத்திமூன்று வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முல்லைத்தீவு நகரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு அரச செயலகக் கட்டடத் தொகுதியில் தற்காலிக இடத்தில் வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் இந்த நீதிமன்றத்தை நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரத்ன விடம் இலங்கையின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீன அரசு உதவுவதாக சீனாவின் உதவிப் பிரமதர் ஸீ ஜிங்ஸ் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று எமது இணையத்திற்குத் தெரிவித்தது.
பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் அதிவெப்ப காலநிலை காரணமாக சுமார் 520 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அவரசரக் கூட்டமொன்று இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் மாவட்ட பிரதேச செயலாளர் ஸ்டேன்லி டிமேல் தலைமையில் நடைபெற்றது.
பாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும்.
ஒகஸ்ட் 09ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
கப்பல் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் எரிபொருளை கடற்படையின் பாதுகாப்புடன் 24 மணித்தியாலமும் கரையேற்றுவதற்கு பெட்ரோலிய வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் விரயமான கோடிக் கணக்கான ரூபா நிதியை மீதப்படுத்த முடியுமென அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Sub Species Isrealensis) பக்aரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம்.முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.
போலி மருந்தகங்கள் (பாமஸிகள்), போலி மருந்தகர்கள் (பாமஸிஸ்ட்கள்) மற்றும் அபாய ஒளடத சட்டத்தை மீறுவோர் பிடிபடும் பட்சத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என ஒளடத கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் கே.கமகே தெரிவித்தார்.
நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் புசல்லாவை வகுக்கப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம நேற்று 17ம் திகதி நண்பகல் வேளையில் இடம் பெற்றுள்ளது.
முன்னாள் முதலாவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியும்(1989-1990) தற்போதய பாதுகாப்புச் செயலாளருமான கோடாபாய ராஜபக்க்ஷஅவர்கள் அநுராதபுரம், சாலியபுர எனும் இடத்தில் அமைந்துள்ள கஜபா றெஜிமன்ட் தலைமயகத்தில் படையினருக்கான இரண்டு மாடி விடுமுறை இல்லம் மற்றும் குடிநீர் திட்டத்தையும் அண்மையில்(ஜூலை:15) திறந்து வைத்தார்.
நிலக்கண்ணி அகற்றும் பணிகளைக் கையாள்வதற்கான தேசிய மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகளை துரிதப்படுத்துவதுடன் மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் துரிதப்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல்ல தெரித்தார்.
பொலன்னறுவை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்புக்கு புதிய ரயில் பஸ் சேவை ஒன்று எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.





