E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

மட்டக்களப்பில் ஜானாதிபதி தேர்தல் 2010 வாக்களிப்பின் போது..

இலங்கையின் அடுத்த ஜானாதிபதியை தெரிவுசெய்யும் ஜானாதிபதி தேர்தலில் கிழக்கு மாகாண மக்கள் தங்களது அடுத்த ஜானதிபதிக்கு வாக்களித்து கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச தலைவர்கள் தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகிறார்கள். குறிப்பாக மட்டக்களப்பு கிரான் பகுதியில் கருணா அம்மான் என்று அழைக்கப்படும்   சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய வி.முரளிதரன் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

கிராம மக்களின் வெற்றியே நாட்டின் வெற்றியாகும்: மஹிந்த ராஜபக்ஷ

கடந்த காலத்தைப் படிப்பினையகக் கொண்டு நாட்டு மக்கள் தமது எதிர்கால பயணத்தைத் தீர்மானித்து விட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் 26ம் திகதி மக்கள் அத்தீர்மானத்தை வெளியிடுவர் எனவும் நாடு துண்டாடப்படுவதற்கு மக்கள் இனி ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் எனவும் கிராம மக்களின் வெற்றியே நாட்டின் வெற்றியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அம்பாறை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தொடர்ந்து வாசிக்க…

புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 566 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு.

படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் இரண்டாம் கட்டமாக மேலும் 566 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வவுனியா காமினி மகா வித்தியாலயம், பம்பைமடு உட்பட வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்கள் 566 பேரும், வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அருகே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். புலிகளினால் பலாத்காரமாக சிறுவர் படையணிக்கு சேர்க்கப்பட்டிருந்த சிறுவர் தொடர்ந்து வாசிக்க…

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருக்கோவில் முருகன் ஆலயத்ததுக்கு விஜயம் செய்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருக்கோவில் முருகன் ஆலயத்ததுக்கு விஜயம் செய்தார். பொங்கல் திருவிழாவையொட்டி நடந்த வழிபாடுகளில் அவர் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். இதன்போது அமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரளீதரன், பேரியல் அஷ்ரப் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

கேணல் ராம் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை:இராணுவ பேச்சாளர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம், அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் தரப்பு தெரிவித்திருந்ததை அரச தரப்பு மறுத்துள்ளது. தடுப்பு காவலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில் கேணல் ராம் மறைந்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் தொடர்ந்து வாசிக்க…

எவருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்கிறார் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.

ஜனாதிபதி  தேர்தல் தொடர்பாக கொழும்பு பேராயர் பேரருட்திரு கலாநிதி  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் தாம் வெளியிட்ட அறிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதைப் போன்று, தான் குறிப்பிடாத விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டமை குறித்துக் கவலை அடைவதாக பேராயர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமது தலைமைத்துவம் வழிகாட்டல்களை மாத்திரமே  வெளிப்படுத்துவதாகவும்  எந்தவகையிலும் தொடர்ந்து வாசிக்க…

முதற் கட்டத்தில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடித் தொடர்பற்ற சுமார் 1,000 பேர் விடுவிப்பு.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் சுமார் ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார். இவர்கள் நீதவான் நீதிமன்ற உத்தரவைப்பெற்று, சட்ட மருத்துவ அதிகாரி  ஒருவரின் முன்னிலையில்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் நாளை  விடுவிக்கப்பட உள்ளனர். படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தொடர்ந்து வாசிக்க…

எளிமைதான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துவதோடு பல்வேறு உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.

எளிமைதான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துவதோடு பல்வேறு உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான். எப்போதும் தலைகனத்தில் ஆடாதவர். அதனால்தான் ஆஸ்கர் விருது வரை உயர்த்தியிருக்கிறது. வழக்கம்போல தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார் இசைப்புயல். இந்த 44 வயதில் இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற சந்தோஷத்தை எவ்வளவு ஆர்ப்பாட்டமாகவும் கொண்டாடி இருக்கலாம். ஆனால் தனது குடும்பத்தார் நெருங்கிய நண்பர்களோடு மட்டும் நேற்று முன் தினம் தனது பிறந்த தொடர்ந்து வாசிக்க…

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான வேலுப்பிள்ளை அவர்கள் காலமானதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக  பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தமது 86 வது வயதில் நேற்று காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் தொடர்ந்து வாசிக்க…

வெற்றுத் தாளில் கையொப்பம் இட்டு பிரபாகரனிடம் கொடுத்த 22 மந்தைகளின் கூட்டமே கூத்தமைப்பு !

யார் அங்கே! தமிழ் தேசியக் கூட்டமைப்பா? அப்படி ஒரு அமைப்பு இலங்கையில் இருக்கின்றதா? அது என்ன சம்மந்தன் கோஷ்டியா….? சிவாஜிலிங்கம் கோஷ்டியா….? கிஷோர் கோஷ்டியா….? கஜேந்திரகுமார் பொனனம்;பலம் கோஷ்டியா….? அல்லது குதிரை கஜேந்திரன் கோஷ்டியா….?  எந்தக் கோஷ்டியைக் குறிபிடுகின்றீர்கள்? புலிகளின் ஆயுதப் பிரசன்னம்  இருந்த காலகட்டங்களிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றொரு அமைப்புஃகட்சி ‘தனியாக’ இருந்ததாக வரலாறு  தடையங்கள் எதனையும் காண தொடர்ந்து வாசிக்க…

மட்டக்களப்பு – கல்முனை ஏ-4 நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக முழுமையாகத் திறப்பு.

கடந்த 20 வருடங்களாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு – கல்முனை இடையிலான ஏ- 4 நெடுஞ்சாலை இன்று முதல் மீண்டும் பொதுப் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மட்டக்களப்புக்கும் கல்முனைக்குமிடையில் மேற்படி நேரடிப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக இவ்வழியான போக்குவரத்து வேறு குறுக்குப் பாதைகள் ஊடாக இடம்பெற்று வந்தமையினால் பொது மக்களும், வாகன சாரதிகளும் சிரமங்களை தொடர்ந்து வாசிக்க…

26 வயது இளைஞனின் தாம்பத்திய வாழ்க்கைக்கு 12 வயது இளம் சிறுமி !

12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம்செய்ய முயன்ற 26வயதானவர் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பொலிசாருக்கு கிடைத்த தகவல்படி இளைஞருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமாதம் 19ம்திகதி சிறுமியின் தாயார் பண்டாரகம நகரம் சென்றிருந்த போது சிறுமி பக்கத்து கடையில் ஜஸ்பெக்கட் வாங்கச் சென்றதாகவும், அச்சமயம் குறித்த தொடர்ந்து வாசிக்க…

அரச மரியாதைகளுடன் அமைச்சர் சந்திரசேகரனின் இறுதிக் கிரியை.

காலஞ்சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளன. தலவாக்கலையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு பொது மக்கள் இன்று பி. ப. ஒரு மணி வரை தமது இறுதி அஞ்சலியை செலுத்த முடியும். ஒரு மணியிலிருந்து மூன்று மணி வரை அவரது குடும்ப அங்கத்தவர்களினால் இந்து சமய முறைப்படியிலான சமயக் கிரியைகள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பூதவுடல் நகர தொடர்ந்து வாசிக்க…

காரைதீவுப் பிரதேச சபையின் 5வது வித்ய சாகித்ய விழாவும் பொதுச் சந்தைத் திறப்பு விழாவும்.

கடந்த புதன்கிழமை போலாபலமாக நடைபெற்றது. அங்கு பாராட்டப்படுவோரும் அதிதிகளும் பெற்றோர்களும் விபுலானந்த மத்தியகல்லுரி பாண்ட் வாத்தியகுழுவினரால் அழைத்து வரப்பபட்டனர். இவ் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.செல்வராஜா, ஜனாதிபதியின் இணைப்பாளர் கு.இனியபாரதி, நெக்டெப் பிரதி திட்டப் பணிப்பாளர் தௌபீக் உதவி உள்ளுராட்சி ஆணையாளர் இர்சாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், இவ் நிகழ்வில் அதிதிகளினால் பொதுச் சந்தைக் கட்டடம் தொடர்ந்து வாசிக்க…

கிழக்குக் கடற்பகுதியில் மீன்பிடித் தடை நீக்கத்திற்கு மக்கள் வரவேற்பு.

கிழக்குக் கடற்பகுதியில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியமைக்கு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு இதன்மூலம் சுமுக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிரந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 29 ஆந் திகதி சுமார் 450 பேர் கலந்துகொண்ட விசேஷ கூட்டத்தில் கிழக்கு மாகாண கடற்படைத் தளபதி ரியல் தொடர்ந்து வாசிக்க…

யாழ். உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இலகுவில் செல்ல ஏற்பாடு.

யாழ் குடாநாட்டின் உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங்கும் பாடசாலைகளுக்கு  ஆசிரியர்களும்,  மாணவர்களும் இலகுவில் சென்று வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள ஏனைய பாடசாலைகளைத் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக  வட மாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர்  எஸ். இளங்கோவன் தெரிவித்தார். உயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போது இயங் தொடர்ந்து வாசிக்க…

மலையக சிறுவர்கள் குறித்து கணீப்பீடு செய்யவுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வீடுகளிலும் கடைகளிலும் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள மலையக சிறுவர்களை அடையாளங்கண்டு அவர்களை சமூகமயப்படுத்தும் பாரிய திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் ஜகத்  வெல்லவத்த தெரிவித்தார். வறுமை காரணமாக பெருமளவு மலையகச் சிறுவர்கள் கொழும்பிலும் ஏனைய பகுதிகளலும் வேலைக்கமர்த்தப்பட்டு  வருகின்றனர். இவர்கள் பல்வேறு சௌகரியங்களுக்கு ஆளாகி வருவதோடு சித்திரவதை செய்யப்பட்டும் தொடர்ந்து வாசிக்க…

மட்டக்களப்பில் ஜானாதிபதியின் முதலாவது பிராசார மேடையில் அமோக வரவேற்புடன் நாமல் ராஜபக்ஷ !

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறீ லங்கா சுதந்திரக்கட்சியின் முதலாவது பிரசார கூட்டத்தில் இலங்கையின் ஜானாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாளை இளைஞர்கள் அமைப்பின் தலைவருமாகிய நாமல் ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் நடைபெற்ற தொடர்ந்து வாசிக்க…

யாழில் இருந்து வன்னிக்கு வரும் அரச ஊழியர்களுக்கு இலவச பஸ் ஜனவரி முதல் நடத்த ஏற்பாடு.

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னியில் கடமையாற்ற வரும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச  ஊழியர்களுக்காக திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இலவச பஸ் போக்குவரத்துச் சேவை ஜனவரி முதல்  நடத்தப்படுகின்றது. குறிப்பாக ஆசிரியர்களின் நலன்கருதி இந்த இலவச பஸ் சேவை ஒழங்கு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாணத்தின் கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். வன்னியில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய ஆசிரியர்கள், யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணத்தின் தொடர்ந்து வாசிக்க…

அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் இன்று மாரடைப்பால் காலமானார்.

சமூக அநீதி ஒழிப்புத்துறை அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான  பெரியசாமி சந்திரசேகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.  இறக்கும் போது அவருக்கு வயது 52 ஆகும். இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அமைச்சரை உடனடியாக கொழும்பின் நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அங்கு அவர் உயிர்பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பிரபல அரசியல்வாதியாக திகழ்ந்த அவர் பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவராவார். தொடர்ந்து வாசிக்க…

 பக்கம் 57 இல் 1  1  2  3  4  5 » ...  Last »