எள்ளி நகைத்து ஏப்பம் விட்டோரைக் – கில்லி போல்
நின்று திணறடித்த சேனைத் தலைவா!
இனவாதத் தீமூட்டிக் குளிர்காய்ந்து வந்தோரின்
முகத்திரை கிழிக்கவே முன்சென்ற தமிழா!
இனம் வாழத் தமிழ்வாழப் புயலாக வன வாசம் புறப்பட்டமறவா!
ஈழப்போரில் குளித்த எங்கள் காவியத் தலைவா!!
43 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும்
காவிய நாயகனே எங்கள் கருணா அம்மானே!
நாற்திசையும் உன் பெயர் விளங்கும்,






