E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

கிழக்கு மாகாண விகாரைகளை புனரமைக்க கோரி உண்ணாவிரதம் – படங்கள் உள்ளே

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகளையும் மட்டக்களப்பு நகரிலுள்ள மங்கள ராம பௌத்த விகாரையையும் உடனடியாக புனரமைத்து தருமாறு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்க நாயக்கரும் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதியுமான அம்பியிட்டிய சுமணரத்தின தேரோ இன்று (5.8.2010  வியாழக்கிழமை)  காலை தொடக்கம் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதொன்றை ஆரம்பித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணம் அதிகரிப்பு

இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கின் அபிவிருத்திக்கு புலிகளின் நிதியைப் பயன்படுத்துவதில் தவறில்லை: கெஹெலிய

வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

சிறந்த சுகாதாரத் துறை கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவோம்: ஜனாதிபதி

இலங்கையை 6  வருடகாலப் பகுதிக்குள் சிறந்த சுகாதாரத் துறையை கொண்ட நாடாக மாற்றியமைக்கப் போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரியில் தெரிவித்தார்.
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரசவ வார்டினை திறந்து வைக்கும் போது மேற்படி ஜனாதிபதி தெரிவித்தார்.

களனி சுகாதார பொறுப்பதிகாரிகளுக்கு பிரதியமைச்சரின் சூளுரை

டெங்கு நோயினால் களனி பிரதேசத்தில் மரணம் சம்பவிக்குமாயின் உரிய சுகாதார பொறுப்பதிகாரிகளை மரணம் சம்பவித்த வீட்டுவாசலில் உள்ள மரத்தில் கட்டி வைப்பேன் என நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா சூளுரைத்துள்ளார்.
பிரதேச சபைக் கட்டிடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது மேற்படி தெரிவித்தார்.

மத்திய வங்கியில் தங்கத்தின் சேமிப்பு அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி கடந்த 10 மாதங்களில் 21 மெட்ரிக் தொன் தங்கத்தை வாங்கியுள்ளதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் சேமிப்பு பெரிதும் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் மதிப்பு 75 பில்லியன் ரூபாவென அவர் மேலும் கூறினார்.

வாகரையில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

வாகரைப்பரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அம்மன் சிலை வாகரை பொலிசார் திங்கட்கிழமை (26.7.2010) வாழைச்சேனை நீதிமன்றத்தில் நீதிபதியின் தீர்ப்புக்காக ஒப்படைத்துள்ளனர். வாகரைப்பிரதேசத்திலுள்ள கதிரவெளி எனுமிடத்திலிருந்து 4கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மலைபயடி வாரத்தில் அம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்ட நபரொருவர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.

‘ஆடிவேல் ஓர் ஐக்கிய விழர் இன ஐக்கியத்துக்கு புதுத்தெம்பு’

கொழும்பில் ஆடிவேல் விழாவை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையானது, இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் புத்திஜீவிகள்,கல்விமான்கள் மற்றும் மதப்பெரியார்கள் கருத்துத் தெரிவித்தனர்.

23 வருடங்களின் பின்னர் முல்லை நீதிமன்றம் ஆரம்பம்

இருபத்திமூன்று வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முல்லைத்தீவு நகரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு அரச செயலகக் கட்டடத் தொகுதியில் தற்காலிக இடத்தில் வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் இந்த நீதிமன்றத்தை நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவ சீனா தயார்

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரத்ன விடம் இலங்கையின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீன அரசு உதவுவதாக சீனாவின் உதவிப் பிரமதர் ஸீ ஜிங்ஸ் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று எமது இணையத்திற்குத் தெரிவித்தது.

பெல்ஜியம் நாட்டில் அதிவெப்ப காலநிலை:520 பொதுமக்கள் உயிரிழப்பு

பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் அதிவெப்ப காலநிலை காரணமாக சுமார் 520 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு மக்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

டெங்கு நோய் தடுப்புக்காக மன்னாரில் அவசரக் கூட்டம்

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அவரசரக் கூட்டமொன்று இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் மாவட்ட பிரதேச செயலாளர் ஸ்டேன்லி டிமேல் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் அதிகாரிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்: இஸ்ரேலுக்கு இலங்கை ஆதரவு

பாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கூட்டுப்படையதிகாரியுமான டொனால்ட் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.
வைநெட் நியூஸுக்கு(Ynetnews)  அளித்த செவ்வியொன்றின் போதே டொனால்ட் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா புனர்வாழ்வு நிலையம் : க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு 362 பேர் தோற்ற ஏற்பாடு

ஒகஸ்ட் 09ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362  முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

எரிபொருளை 24 மணி நேரமும் கரையேற்றுவதற்கு விசேட ஏற்பாடு

கப்பல் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் எரிபொருளை கடற்படையின் பாதுகாப்புடன் 24 மணித்தியாலமும் கரையேற்றுவதற்கு பெட்ரோலிய வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் விரயமான கோடிக் கணக்கான ரூபா நிதியை மீதப்படுத்த முடியுமென அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

BTI பக்றீரியா அடுத்த வாரம் சந்தையில்…

டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Sub Species Isrealensis) பக்aரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம்.முபாரக் நேற்றுத் தெரிவித்தார்.

போலி மருந்தகர்கள் பிடிபட்டால் சிறை : கட்டுப்பாட்டுச் சபை தெரிவிப்பு

போலி மருந்தகங்கள் (பாமஸிகள்), போலி மருந்தகர்கள் (பாமஸிஸ்ட்கள்) மற்றும் அபாய ஒளடத சட்டத்தை மீறுவோர் பிடிபடும் பட்சத்தில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என ஒளடத கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் கே.கமகே தெரிவித்தார்.
மேற்கத்தைய மருந்து வகைகளைச் சிலர் போதைக்காகவும் முறைகேடாகவும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அபாயகர ஒளடத சட்டத்தை கடுமையாகப் பின்பற்ற நடடிக்கை எடுக்கப் போவதாகவும் கமகே தெரிவத்தார்.

கண்டி புசல்லாவையில் வாகன விபத்து : 10 பேர் படுகாயம்

நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் புசல்லாவை வகுக்கப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம நேற்று 17ம் திகதி நண்பகல் வேளையில் இடம் பெற்றுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரினால் கஜபாபடைகளின் தலைமைகத்தில் இரண்டு மாடி விடுமுறை இல்லம் அண்மையில் திறந்து வைப்பு

முன்னாள் முதலாவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியும்(1989-1990) தற்போதய பாதுகாப்புச் செயலாளருமான கோடாபாய ராஜபக்க்ஷஅவர்கள் அநுராதபுரம், சாலியபுர எனும் இடத்தில் அமைந்துள்ள கஜபா றெஜிமன்ட் தலைமயகத்தில் படையினருக்கான இரண்டு மாடி விடுமுறை இல்லம் மற்றும் குடிநீர் திட்டத்தையும் அண்மையில்(ஜூலை:15) திறந்து வைத்தார்.

மீள்குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை- கெஹெல்லிய

நிலக்கண்ணி அகற்றும் பணிகளைக் கையாள்வதற்கான தேசிய மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகளை துரிதப்படுத்துவதுடன் மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் துரிதப்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல்ல தெரித்தார்.

 பக்கம் 62 இல் 1  1  2  3  4  5 » ...  Last »