பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் நேற்று (21) முல்லைத்தீவு பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர். இவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள், மக்களின் மேம்பாடு, மீள் குடியேற்றம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.






