E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

கிளிநொச்சியில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக கிளிநொச்சி நகரில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை ஆரம்பித்து வைத்தார்.
யாழ். குடாநாட்டுக்குரிய எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் கூடிய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

அமெரிக்க யுத்தக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்..

அமெரிக்க யுத்தக் கப்பல் பேர்ள் ஹார்பர் எல்.எஸ்.டி.  52 திருகோணமலைக்கு வருகை தந்துள்ளது.  நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 11.00 மணியளவில் இக்கப்பல் திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறையில் நங்கூரமிட்டுக் கொண்டது. இதில் 800 படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலி நாணயத் தாள் அச்சிட்ட 2 பேர் கைது

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் நேற்று கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.