E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

பொலன்னறுவை – மட்டு. ரயில் பஸ் சேவை 23இல் ஆரம்பம்

பொலன்னறுவை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்புக்கு புதிய ரயில் பஸ் சேவை ஒன்று எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் இரத்மலானை பொறியியல் பிரிவினரால் மாற்றியமைக்கப்பட்ட இரண்டு இந்திய தயாரிப்பு பஸ்கள் ரயில் பஸ்ஸாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஜப்பானில் 902 அமெ. குண்டுகள் கண்டுபிடிப்பு

இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மொத்தமாக 902  குண்டுகள் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் ஒகினாலா நகரின் ஒரு ஹோட்டலுக்கு அருகில்,  வீதி அபிவிருத்திப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மண்ணுக்குள் இரும்பு குண்டுகள் புதைந்து கிடந்ததை இவர்கள் கண்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கு நூலகம் திறந்து வைப்பு

முதன் முறையாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளின் தகவல் தொழில் நுட்ப அறிவையும், வாசிப்புத்திறனையும் அதிகரிக்க இன்று தகவல் தொழில் நுட்ப பிரிவும், நூலகமும் திறந்து வைக்கப்பட்டது.

தர்ஷிகா கொலை தொடர்பான சந்தேக நபர் பிணையில் விடுதலை

வேலணை வைத்தியாசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகாவின் கொலை தொடர்பான சந்தேக நபர் டாக்கடர் பிரியந்த செனவிரட்ணவை பிணையில் செல்வதற்கு மேல்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.