E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

கண்டி புசல்லாவையில் வாகன விபத்து : 10 பேர் படுகாயம்

நுவரெலியாவிலிருந்து புசல்லாவை வழியாக கண்டி நோக்கி சென்ற வேன் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் புசல்லாவை வகுக்கப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம நேற்று 17ம் திகதி நண்பகல் வேளையில் இடம் பெற்றுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரினால் கஜபாபடைகளின் தலைமைகத்தில் இரண்டு மாடி விடுமுறை இல்லம் அண்மையில் திறந்து வைப்பு

முன்னாள் முதலாவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியும்(1989-1990) தற்போதய பாதுகாப்புச் செயலாளருமான கோடாபாய ராஜபக்க்ஷஅவர்கள் அநுராதபுரம், சாலியபுர எனும் இடத்தில் அமைந்துள்ள கஜபா றெஜிமன்ட் தலைமயகத்தில் படையினருக்கான இரண்டு மாடி விடுமுறை இல்லம் மற்றும் குடிநீர் திட்டத்தையும் அண்மையில்(ஜூலை:15) திறந்து வைத்தார்.

மீள்குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை- கெஹெல்லிய

நிலக்கண்ணி அகற்றும் பணிகளைக் கையாள்வதற்கான தேசிய மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகளை துரிதப்படுத்துவதுடன் மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் துரிதப்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல்ல தெரித்தார்.