இருபத்திமூன்று வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முல்லைத்தீவு நகரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு அரச செயலகக் கட்டடத் தொகுதியில் தற்காலிக இடத்தில் வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் இந்த நீதிமன்றத்தை நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.






