E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

23 வருடங்களின் பின்னர் முல்லை நீதிமன்றம் ஆரம்பம்

இருபத்திமூன்று வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முல்லைத்தீவு நகரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு அரச செயலகக் கட்டடத் தொகுதியில் தற்காலிக இடத்தில் வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் இந்த நீதிமன்றத்தை நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவ சீனா தயார்

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் டி.எம். ஜயரத்ன விடம் இலங்கையின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீன அரசு உதவுவதாக சீனாவின் உதவிப் பிரமதர் ஸீ ஜிங்ஸ் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று எமது இணையத்திற்குத் தெரிவித்தது.

பெல்ஜியம் நாட்டில் அதிவெப்ப காலநிலை:520 பொதுமக்கள் உயிரிழப்பு

பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் அதிவெப்ப காலநிலை காரணமாக சுமார் 520 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு மக்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

டெங்கு நோய் தடுப்புக்காக மன்னாரில் அவசரக் கூட்டம்

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த அவரசரக் கூட்டமொன்று இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் மாவட்ட பிரதேச செயலாளர் ஸ்டேன்லி டிமேல் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் அதிகாரிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்: இஸ்ரேலுக்கு இலங்கை ஆதரவு

பாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கூட்டுப்படையதிகாரியுமான டொனால்ட் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.
வைநெட் நியூஸுக்கு(Ynetnews)  அளித்த செவ்வியொன்றின் போதே டொனால்ட் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,