எளிமைதான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துவதோடு பல்வேறு உயர் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான். எப்போதும் தலைகனத்தில் ஆடாதவர். அதனால்தான் ஆஸ்கர் விருது வரை உயர்த்தியிருக்கிறது. வழக்கம்போல தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார் இசைப்புயல். இந்த 44 வயதில் இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற சந்தோஷத்தை எவ்வளவு ஆர்ப்பாட்டமாகவும் கொண்டாடி இருக்கலாம். ஆனால் தனது குடும்பத்தார் நெருங்கிய நண்பர்களோடு மட்டும் நேற்று முன் தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஏதோ ஒரு நாட்டில் இருந்த ரஹ்மான், இந்த பிறந்த தினத்தில் சென்னையில் வீட்டில் இருந்ததை சொல்லி மகிழ்கின்றனர் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தினர்.






