ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்டத்தின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் இல்லத்திற்கு விஜயம் செய்து ஸ்ரீபதியின் மனைவி தில்ருக்ஷியுடன் உரையாடினார்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பசில் ராஜபக்ஷ நேற்று மாலையே ஸ்ரீபதியின் இல்லத்திற்கு சென்றார். கம்பஹா மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணிக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் திருமதி தில்ருக்ஷி இச்சந்திப்பின்போது பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.






