E-Mail Address : info@vaavimagal.com எமது மின்னஞ்சல் முகவரி : info@vaavimagal.com

இந்திய மருத்துவ கவுன்சில் கலைப்பு

பெருமளவில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இந்தக் கவுன்சிலுக்கு பதிலாக பிரபல மருத்துவர்களைக் கொண்ட ஏழு உறுப்பினர் நிர்வாகக் குழு அமைக்கப்பட உள்ளது.

அடுத்த ஓராண்டுக்கு அந்தக் குழு பொறுப்பில் இருக்கும் என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் சுஜாதா ராவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க…

தமிழினம் பலம் குன்றுவதற்கு கூட்டமைப்பின் நிலைப்பாடே வழிவகுத்தது

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் தேர்தல் முறைமாற்றம் முக்கிய இடம் வகிக்கின்றது. தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்குப் பதிலாகத் தொகுதிவாரி முறையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் கலந்த ஒரு தேர்தல் முறையை நடை முறைப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.   பிரதான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இந்த மாற்றத்துக்கு ஆதரவளிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க…

கோரிக்கைகள் நீதியானவையாக இருக்கும் போது, அதற்கான அடிகளும் முறையானவையாக இருக்கவேண்டும் – புலத்தான்

அம்மானுடைய பக்குவமான போக்கினை புலிகளின் தலைவர் பிரபாகரனே புரிந்து கொள்ளவில்லை என்றால்,  எமது தமிழ் மக்களா புரிந்துகொள்ளப்போகின்றார்கள்.  புலிகளின் நடவடிக்கைகளை நீதியான முறையிலும்,    சட்டங்களுக்கேற்ற  முறையிலும்   தமிழர்களின் அழிவுகளைக்குறைக்கும் போக்கையும் அப்போதிருந்தே எடுத்துரைத்திருந்த போதிலும் புலிகளின் தலைமை அதனை நிராகரித்தனர். அதேபோன்று இன்றும் ஒரு சிலரின் போக்குகள் அம்மானின் அடிகளைப்புரிந்து கொள்ளாது தேவையற்ற வதந்திகளையும் அவருக்கெதிரான வதந்திகளையும் தற்போது வீசிவருகின்றனர். இந்தவகையில்,  புலத்தில் தமிழர்களின் போக்கு எங்கே அம்மானை ஏற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் இவ்வாறான போக்கில் மக்களை கொண்டுசெல்கின்றனர். தொடர்ந்து வாசிக்க…

இவ்வருடத்திற்கான முழுமையான பட்ஜட் ஜுனில் சமர்ப்பிப்பு

அரசாங்கத்தின் இவ்வருடத்திற்கான முழுமையான வரவு செலவுகளைக் கொண்டதான வரவு செலவுத் திட்டமொன்று எதிர்வரும் ஜுன் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க…

ஏழு பேரடங்கிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு: அரசு தெரிவிப்பு

படித்த படிப்பினைகளை கொண்டு பிரச்சினைகளின் அடிப்படையை கண்டறிவதற்காக ஏழுபேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தீர்வினை எட்டாவிட்டால் அது நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சினையாக அமைந்து விடும் என்பதுடன் சமாதானமும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் முன்னெடுத்து செல்லப்படுகின்றன என்றும் அவர் சொன்னார். தொடர்ந்து வாசிக்க…

ஜனாதிபதி தலைமையிலான உயர் குழு ஈரான் தலைநகர் பயணம்

ஜீ- 15 நாடுகளின் மாநாடு இன்று (14) முதல் 17 ஆம் திகதி வரை ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக்குழு இன்று (14) தெஹ்ரான் பயணமாகுமென எதிர் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க…

தமிழ்த் தலைவர்களிடம் அணுகுமுறை மாற்றம் தேவை

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நீக்க வேண் டும் என்ற கோரிக்கை மிகப் பழையது. நீண்ட கால மாகப் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் வலியுறுத்திவரும் கோரிக்கை. இப்போது அரசாங்கம் இம் மாற்றத்தைச் செய்வதற்கு முன்வந்திருக்கும் நேரத்தில் அதற்கு எதிரான குரல் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க…

அதிகாரங்களை கொண்ட அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்த இலங்கையை கோருகிறது இந்தியா

பல்வேறுபட்ட சக்திகளையும் உள்ளடக்கியதாக மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கக்கூடிய செயற்பாட்டுத் திறன் வாய்ந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது.

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்தல் தொடர்பாக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க…

தேசிய படைவீரர் வாரத்தை ஆரம்பிக்கும் முகமாக முதல் கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

தேசிய படைவீரர் வாரத்தை ஆரம்பிக்கும் முகமாக முதல் கொடியை அணிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

முகமாலை யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த சார்ஜன் சந்திரசிறியின் புதல்வன் வருன ரஷ்மின் முதல் கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். தொடர்ந்து வாசிக்க…

பிரதி ஊடக அமைச்சர் நியமிக்கப்படமாட்டார்

ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுக்கென இம்முறை பிரதி அமைச்சரை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சின் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் எனவும் அதனால் அந்த அமைச்சுக்கு பிரதியமைச்சரை இம்முறை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க…

லேக்ஹவுஸ் நிறுவன தலைவராக பந்துல பத்மகுமார மீண்டும் பதவியேற்பு

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார மீண்டும் நேற்று (11) பதவி ஏற்றுக்கொண்டார்.

காலை 10.30  இற்கு மத அனுஷ்டா னங்களுக்கு மத்தியில் பந்துல பத்மகுமார பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்வில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தொடர்ந்து வாசிக்க…

ஆஸ்திரேலியா சென்ற படகு பழுதடைந்ததில் 5 இலங்கையர் பலி

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக சென்ற 64 இலங்கைத் தமிழர்களின் படகு பழுதடைந்ததால், கடலில் மூழ்கி 5 பேர் பலியாகி வி்ட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படிப் படகு ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த போது பழுதடைந்தது. தொடர்ந்து வாசிக்க…

சோமாவதியில் வெள்ளப்பெருக்கு : இருவர் பலி, 25 பேர் படுகாயம்

பொலநறுவை சோமாவதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு இருவர் பலியானதுடன் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பெருக்கு சூழ்ந்த பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிக்கி பரிதவித்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க…

இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் வர்த்தக சமூகம் ஒத்துழைப்பு வழங்கும்

பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளு க்கு ஜப்பான் அரசாங்கமும் ஜப்பான் வர்த்தக சமூகமும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என நிப்பொன் மன்ற தலைவர் யொஹெய் சசகாவ தெரிவித்தார்.

யொஹெய் சசகாவ நேற்று (7) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் நாட்டு பிரதான வியாபாரிகளை ஊக்குவிக்க உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து வாசிக்க…

இந்தோனேஷியாவில் நில நடுக்கம் : இலங்கைக்குப் பாதிப்பில்லை

இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ராவில் இன்று காலை 7.4 ரிச்டர் அளவில் புவி அதிர்வு ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கைகு இதனால் எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை என சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது

ஆபத்தை எதிர்நோக்கும் சிகிரியா ஓவியங்கள்

சிகிரியா ஓவியங்களைப் பழுதாக்கும் சிறிய உயிரினங்களை அழிப்பதற்கு இரசாயனக் களைகொள்ளியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை நான்கு வகையான உயிரினங்கள் இனம் காணப்பட்டன எனவும் அவை சித்திரங்கள் உள்ள இடத்திற்கு வருவதைத் தடைசெய்வதன் மூலம் சித்திரங்களைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறப்பட்டது. அவற்றை அழிப்பதால் சிதிதரங்களுக்கு ஆபத்து ஏதுமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க…

கல்வித்துறையை மறுசீரமைக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு

கல்வித் துறையை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் புதிய கல்விச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கெனப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்காக கொள்கைத் திட்டங்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கை ஒன்றை மூன்று மாத காலத்திற்குள் தயாரித்து சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தப் பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்கொள்ளுமென அமைச்சர் கூறினார். தொடர்ந்து வாசிக்க…

‘ மரண அழைப்பு’ S.M.S பொய்யானவை

நாடெங்கும் பரவலாக தற்போது குறுங்செய்திகள் மூலமான உயிர் அச்சுறுத்தல்கள் கையடக்கத் தொலைபேசியூடாக அனுப்பப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் ஒரு சில குறிப்பிட்ட இலக்கங்களில் வெளிவரும் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க…

பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதாக இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மொத்தமுள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் 621 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,அதிக இடங்கள் பெற்ற கட்சியாக கன்சர்வேடிவ் கட்சி விளங்குகிறது.அக்கட்சி  295இடங்களை இதுவரை பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க…

அரசாங்க – தனியார் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார் அனுஷ பெல்பிட்ட

தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடந்த ஐந்து வருடங்கள் கடமைபுரிந்த அனுஷ பெல்பிட்டவுக்கு திணைக்கள் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை பிரியாவிடை வழங்கினர்.

இது தொடர்பான வைபவம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கனேகல தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  தொடர்ந்து வாசிக்க…

 பக்கம் 72 இல் 5  « First  ... « 3  4  5  6  7 » ...  Last »